கடல்தாயின் பிள்ளைகள் - ஒருநாள்
கறிச்சோறு கேட்டு அவளைக் குடைந்தன
என்ன கறி இருக்கும் என ஏக்கத்துடன்
பார்க்க வந்தாள் தன் கரையை...
கறி கேட்டுத் துடித்தவை எல்லாம்
கறியாகிக் கிடந்ததை பார்த்தழுதாள்
அவள் அழுது வைத்த கண்ணீரை
அழுத்தத்துடன் தூக்கி எறிந்தாள்
அது வாரிக் குடித்தது மனித ஜாதியை
அவள் வாட்டத்தில் விட்ட சாபம் பலித்தது
இழுத்து வந்த சதைகளை எல்லாம்
இரையாக எடுத்து ஊட்டி விட்டாள்
உண்டு மிச்சத்தை உப்புக்கண்டம் போட்டு
உலர்த்த ஒதுக்கினாள் தன் கரையில்...
வெற்று உடலென்று விம்மி அழுத சனம்
வேதனைக் கண்ணீரை வீசியது கடலில்...
**C. விஸ்வநாதன்
**C. விஸ்வநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக