கல்யாணக் கனா கண்டேன் தோழி!


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
பல்லவி

பொட்டப்புள்ள நெஞ்சுக்குள்ள எத்தனையோ ஆச!
அத்தனைக்கும் அர்த்தம் வந்து உள்ளங்கையில் பேச!
உறங்காத நாளுக்கெல்லாம் உசுரூட்ட வந்தானே!
ஊரெல்லாம் வாழ்த்துச் சொல்லும் உறவாக வந்தானே!
என் ரெட்ட ஜட சேத்து ஒரு ஒத்த ஜட போட
ஒரு நேரங்காலம் வந்துருச்சு இன்னும் என்ன ஜாட!

சரணம்

பத்து வித ஒத்துமையும் ஒத்துழைப்பு தந்துருச்சு
தங்கத் தாலி நீ முடிக்க தடையே இல்ல
வெத்தலையும் பாக்கும் போட்டு வெறுநாக்கு செவந்தாச்சு
விட்ட குறை தொட்ட குறை எதுவுமில்ல
உன் நெஞ்சுக் குழி மேல என் நெத்தி வந்து சேர
நல்ல நேரங்காலம் வந்துருச்சு இன்னும் என்ன ஜாட!      (பொட்டப்புள்ள...)

மொத்த சொந்தம் ஒத்துமையா, சுத்தி நின்னு வாழ்த்து சொல்ல,
தங்கத் தாலி நீ முடிச்சு நெஞ்சில் நிப்பாயே!
சுத்தி வந்து நெத்தியில குங்குமத்த நீ நிறைக்க,
சுண்டு வெரல் கைபுடிச்சு சுத்தி வருவோமே!
ஸ்ரீராமன் சீதை போல, மணமாலை மாத்தும் வேள,
நல்ல நேரம் கூடி வந்துருச்சு இன்னும் என்ன ஜாட!       (பொட்டப்புள்ள...)

**C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக