பயமறியும் இளங்கன்று

எட்டிப் பார்க்கிறேன் தெருவினை,
யாரும் இருக்கிறார்களா என்று!

ஓடி விளையாட ஆசை வந்தது.

ஏனோ தெரியவில்லை,
வீடு தாண்ட பயம்.

எதிர் வீட்டு மாமா,
பக்கத்து வீட்டு அண்ணன் - என
யாரையும் நம்ப மறுக்கிறது.

இத்தனைக்கும் நான்
இன்னும் பூக்காத
இளங்கன்று!