ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருப்பாடல்


அல்லிநகரம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி


அகிலாண்ட ஈஸ்வரியின் அல்லிநகர் தோற்றமிது
மங்கை அவள் திருப்புகழை அனுதினம் நீ பாடு

குங்குமத்தில் வாசம் கொண்டு மங்களமாய் வரம் அருள்வாள்
எவ்வுயிர்க்கும் வரம் கொடுத்து எந்நாளும் துணை இருப்பாள்
கண்ணோடு இமையாகி காலமெல்லாம் வாழ வைப்பாள்
எந்நாளும் நலமாகி எல்லோர்க்கும் ஒளி கொடுப்பாள்

அன்னையிடம் ஓடி வந்து அன்பு மழை ஊற்றெடுக்கும்
அன்றாடப் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கும்
நம்பி வந்த எல்லோர்க்கும் நல்லதொரு வழி பிறக்கும்
நாயகி திருவருளால் பொன்னான வாழ்வு வரும்

நகரெங்கும் தேவி அருள் நன்மையாய் செழித்திருக்கும்
மனமார துதிப்பவர்க்கு பக்தியில் மனம் லயிக்கும்
வெற்றி அவள் குங்குமத்தில் நிச்சயமாய் நிலைத்திருக்கும்
அல்லிநகர் திருத்தலத்தில் எந்நாளும் அருள் கிடைக்கும்

**C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக