ஸ்ரீ கலியுக சிவகாம சௌந்தரி திருப்பாடல்


கலியுக சிதம்பரரின் சிவகாம சுந்தரி
கயிலையில் அருள் புரியும் ஜெகதீஸ்வரி
அருள்வாய் நின்பதமே, மலர்வாய் பொன்முகமே
அழகே! பெண்மயிலே! பொற்சபையின் மாதவமே!

கயிலைப் பரம்பொருளின் மனம் புரிந்து மகிழும் கனகாங்கியே!
அந்த சிவனுக்குள் சரிபாதி இடம் வாங்கினாய்
அய்யன் திறமைக்கும் புகழுக்கும் துணையாகிறாய்.

கனக சபையில் நடராஜருடன் திருநாட்டியம் புரிபவளே!
வைர ஒளிச் சதங்கை தண்டை குலுங்கிட ஆடியே வருபவளே!
நன்மை செழித்திட, உண்மை நிலைத்திட ஆடிய பேச்சி காளியே!
அன்பர்கள் வியந்திட ஆதிசிவனுடன் ஆனந்த நடனம் செய்பவளே!

நந்தி மத்தளம் கொட்டவே, நாமகள் வீணை மீட்டவே
கந்தன், கணபதி, கங்கை, அம்புலி, நாகம் உன்னுடன் ஆடவே

எந்த நாளும் உனை சிந்தை செய்ய
வரம் தந்தருள்வாய் பரமேஸ்வரியே!
மந்தஹாசமுடன் இன்ப வாழ்வு பெற
சந்ததம் மங்களம் தந்திடும் அம்பிகையே!

**C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக