சிறு தொடுதலிலே


சுடும் வெயிலினிலே..
முதல் முதலாய், சுகங்களைக் காண..
மழை வரும் பொழுதும்
உந்தன் மடியில் நான்.. ஏங்க
இனி ஒரு பொழுதும்
உயிர் பிரியா, உரிமையை வாங்க 
ஒரு கண நிமிடம்
எனதில்லையே, நீ... கேட்க!

கலையே இல்லா சிலை போல
கிடந்தேன் அன்பே சுமையாக
எடுத்தாய் எனை நீ முழுதாக
தொடுத்தாய் மனதை அழகாக

நான் மழைநீர் என்பது தெரியாதா...
கடல்-வானம் நீ புரியாதா!!!
விழுந்தாலும் உன்னை அடைவேனே..
எழுந்தாலும் வந்து தொடுவேனே.

பனி விழும் காலம்
இனி வரும் மாதம்
இருவரும் ஆசை நெருக்கத்திலே!
மழை தரும் மேகம்
மனதினில் மோகம், மயக்கத்திலே...

கரையே இல்லா கடல் போல 
கலந்தாய் எனக்குள் முழுதாக 
மறந்தேன் எனை நான் மகிழ்வாக 
பிறந்தாய் அன்பே விரைவாக...

நம் உணர்வுகள் ஒன்றெனப் புரியாதா..
உடல் தான் வேறெனத் தெரியாதா!!
சிரிப்பால் மனதைத் திறந்தோமே
சிறகால் உலகைத் தொடர்வோமே...

இது ஒரு மோகம்
இளமையின் தாகம்
விரைவினில் ஆசை தீர்வதில்லை
தளர்ந்திடும் ராகம் 
தொடர்ந்திடக் கூடும் நெருக்கத்திலே...

* C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக