உள்ளத்தனையது உயர்வு


வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஒருவன். அவனுக்கு தொழில் நஷ்டம், குடும்பத்தில் நிம்மதி இல்லை. கவலை அவனை வாட்டியது. அதனால், குருவை தரிசித்து, அவனது மனக்கவலை தீர வழி கேட்டான்.

குரு, ஒரு குவளையில் நீர் நிரப்பி, கையளவு உப்பையும் கலந்து கொடுத்தார். அதை சிறிது குடித்ததுமே உமட்டுவதாகச் சொல்லி குவளையை கீழே வைத்து விட்டான்.

குரு, இப்போது ஒரு குளத்தில் அதே கையளவு உப்பைப் போட்டு, அவனை குடிக்க சொன்னார். குளத்து நீர் உப்பு கரிக்கவில்லை, இனிக்கிறது என்றான்.

குரு சொன்னார்... "கவலை என்பது உப்பின் அளவு. நீ ஏன் உன் மனதை குவளையைப் போல சிறிதாக வைத்துள்ளாய்?? குளத்தைப் போல பரந்த மனதோடு வாழ்; கவலைகள் உன்னை பாதிக்காது."

மனம் தெளிவுற்று நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாயினான் அந்த மனிதன்.

ஆம் நண்பர்களே,
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்.
எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.
எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.

இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்.

வாழ்க்கையும் இதே மாதிரி தான். நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.
அதுவே அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கும் சாவியாக அமைந்துவிடும்.

சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.


____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக