ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்


(ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம் என்றும் சொல்வார்கள். இதைப் படித்தால் ஸர்வாபீஷ்டங்களும் திவ்ய ஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும், ஐஸ்வர்யமும் உண்டாகும்)


ஷண்முகம் பார்வதீ-புத்ரம் க்ரௌஞ்ச-ஸைல-விமர்தனம்
தேவஸேநா-பதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 1 |

ஆறுமுகனும் பார்வதியின் புத்ரனும் மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸூரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும் தேவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

தாரகாஸூர-ஹந்தாரம் மயூராஸன-ஸம்ஸ்திதம்
ஸக்தி-பாணிஞ்ச-தேவேஸம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 2 |

தாரகாஸூரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞான வேலை கையில் தரித்தவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

விஸ்வேஸ்வர-ப்ரியம் தேவம் விஸ்வேஸ்வரதநூபவம்
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 3 |

எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவனும் தேவனும் ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரனும், வள்ளி தேவசேனையிடத்தில் காமம் கொண்டவனும், பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனும் மனதைக் கவருகின்றவனும் ஸ்ரீ சிவபுத்ரனுமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

குமாரம் முநிஸார்-தூலமாநஸானந்த-கோசரம்
வல்லீ-காந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 4 |

குமரக் கடவுளும் சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும் வள்ளியின் கணவனும் உலகங்களுக்கு காரணமானவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

ப்ரளய-ஸ்திதி-கர்தாரம் ஆதிகர்தாரம் ஈஸ்வரம்
பக்தப்-ப்ரியம் மதோன்மத்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 5 |

ப்ரளயம் ரக்ஷணம் இவற்றைச் செய்கிறவரும் முதலில் உலகங்களைப் படைத்தவரும், யாவருக்கும் தலைவனும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவனும் ஆனந்தத்தால் மதம் கொண்டவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

விஸாகம் ஸர்வ-பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா-ஸூதம்
ஸதா-பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 6 |

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும் உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கிருத்திகையின் புத்ரனும் எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும்  ஜடையை தரித்தவனுமான சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரமிதம் ய: படேத் ஸ்ருணுயாந்நர:
வாஞ்சிதான் லபதே ஸத்ய: அந்தே ஸ்கந்தபுரம் லபேத்

எவன் ஸ்ரீ ஸ்கந்தனின் ஆறு ஸ்லோகமுள்ள இந்த ஸ்தோத்திரத்தை படிப்பானோ அவன் கோரிய பொருளை உடன் அடைவான். முடிவில் ஸ்ரீ ஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பான்.

|| இதி ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக