செயல்-விளைவு தத்துவம்


ஒரு விவசாயி தன் நிலத்தை உழுது விதை விதைத்தாகி விட்டது. இனி காத்திருக்க வேண்டியதுதான்.

மனிதனின் பொறுப்பு முடியுமிடத்தில்  இறைவனின் பொறுப்பு தலைதூக்குகிறது. பொறுமையில்லாமல் விவசாயி அவசரப்பட்டால் எதுவும் நிகழாது. மன அழுத்தம் தான் மிஞ்சும். 

லிப்டுக்கான பட்டனை அழுத்தி விட்டீர்கள். லிப்ட் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு இன்னும் வரவில்லை என்று அங்கும் இங்கும் நடந்தால் மன அழுத்தம் தான்.

ஒரு செயலை செய்ய முடிவெடுத்து விட்டீர்கள். அச்செயல் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டுமோ எல்லாம் செய்து விட்டீர்கள். இனி காத்திருக்க வேண்டியதுதான்.

பதட்டப்படாமல் காத்திருங்கள். அது அமைதியான வெற்றியை தரும். பதட்டப்பட்டால் மன அழுத்தத்துடன் வெற்றி கிட்டும்.

ஆன்மீக முன்னேற்றம் அடைய தேவையான குணநலன், செய்யும் கடமையை சரியாக செய்து விட்டு
காத்திருப்பதுதான்.

என்ன விளைவு வரவேண்டுமோ அது துளி பிசகாமல் சரியாக நடக்கும். பிரபஞ்ச பேராற்றலின் அடிப்படை சட்டம், 'என்ன நடக்க வேண்டுமோ அது துல்லியமாக நடக்கும்'. செயல்தான் நம்முடையது. மற்றவை இறைவனின் சட்டதிட்டமே.

கடமையைச் செய்வோம். மன அழுத்தமில்லாமல் காத்திருப்போம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எல்லாம் தன்னாலே நடக்கும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக