ஒளி விளக்கின் நிழல்



வாழ்க்கையே ஒரு வர்த்தக உலகம்
வாழும் வரை வரவுகள் சேரும்
வயது முடிந்தால் அனைத்தும் செலவினமாகும்

நடந்ததை மட்டும் நினைத்திருந்தால் நிம்மதி பிறக்காது
நடப்பதை எண்ணி செயல் புரிந்தால் நல்லது விலகாது
வந்ததை எல்லாம் வைத்திருந்தால் வரவுக்கு இடமேது?
வருவதை வடிக்கத் தெரிந்திருந்தால் வாழ்வு கசக்காது

பணத்திற்காக பாதை மாறினால் பெரும் பைத்தியக் காரனடா
கொள்கைக்காக வேடம் போட்டால் கொள்ளையடிப் பானடா
சொல்லுக்காக உயிரை விட்டால் அவன் சுத்த தெய்வமடா
சோற்றுக்காக வளைந்து போனால் சொற்கள் நிலைக்காதடா

விளைந்த நிலத்துக்கு விழுந்த பயிரே சொந்த மாகும்
அலையும் கடலுக்கு அலுப்பு நுரையே கரையை தொடும்
பழுப்பு நிறத்துக்கு வெளுத்த நிறமே கவலை தரும்
எரியும் விளக்குக்கு இருட்டு நிழலே தரையில் விழும்


**C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக