கூட மேல கூட வச்சு...


ஈரக்காத்து வீசையில
நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு
நெருடாம நெருப்பேத்துதே!
கட்டுத்தறி சத்தம் போல
விட்டு விட்டு விக்கல் வந்து
கலங்காம நெனப்பூட்டுதே!

மறுத்துப் பேசாம
மனசு நோகாம
கிறுக்க சரி பண்ணுற

பகுமானமாகத்தான் பேசுற
பனிமூட்டம் போல குளிரூட்டுற
நான் கேக்காத கேள்விக்கும்
தானாவே பதில் சொல்லுற!

மேகத்தோட நெஞ்சுக்குள்ள
மின்னல் வந்து தச்சுருச்சு
மின்சாரத் தடையே இல்ல...
வாழும் வர உந்தன் நெஞ்சில்
வக்கனையா சாய வேணும்
சுகமாக, சுமையாயில்ல...

வயசு போனாலும்
விருப்பம் போகாத
மனசு தா வேணுமே..

தடுமாறிப் போகையில தாங்குற
தள்ளிப் போகும் போது உயிர் வாங்குற
சட்டம் போடாம என் நெஞ்சில்
சரிபாதி நீ ஆளுற....

* C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக