ஸ்ரீ துர்கா ஸப்தச்'லோகீ

தேவீ மஹாத்ம்யம் - ஸ்ரீ மார்கண்டேய புராணத்தில் உள்ள மகத்தான, சக்திமிக்க அதிர்வுகளைக் கொண்ட ஸ்லோகங்கள். சக்தியின் மஹிமைகளை 700 ஸ்லோகங்களில் (மந்திரங்களில்) துதித்துள்ளனர். மகிமை மிக்க இந்த ஸ்துதியை சொல்வதால், அம்பிகை அகம் மகிழ்ந்து அன்பர்களுக்கு அருள்கிறாள் என்கிறது புராணம்.

மூன்று சரிதங்கள் கொண்ட இதன் ஸ்லோகங்கள்,
ப்ரதம சரிதம் - மதுகைடபன் என்ற அரக்கனை வதம் செய்ததையும்,
மத்யம சரிதம் - மகிஷாசுர வதம் மற்றும் உத்தம சரிதம் - சும்ப-நிசும்ப வதம் பற்றி விவரிக்கின்றன.

மனனம் செய்வோரைக் காப்பதே மந்திரம் எனப்படும். இந்த "தேவி மஹாத்மியம்" - இதிலுள்ள அனைத்து ஸ்லோகங்களுமே மந்திரம் என்றே ஆன்றோர் கூறுவார்கள். இந்த மந்திரங்களில் பகையை வெல்லுதல், பிணி நீக்கம், கல்விப் பேறு, மகப் பேறு, ஞானப் பேறு, தன வ்ருத்தி, லோக க்ஷேமம் என்ற 700 வகையான பிரயோகங்கள் பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இதனை பாராயணம் செய்வது ஆகச் சிறப்பு மிக்கது.

தினமும் ஸப்த ஸதி பாராயணம் எல்லோராலும் சொல்லமுடியாது. அதனால் தான், பெரியோர்கள், ஸப்த ஸதியின் சாரமான 'துர்க்கா ஸப்த ஸ்லோகி' என்று ஏழு ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அவற்றைச் சொன்னாலே அனைத்துப் பலனும் கிட்டும், எனச் சொல்லி வைத்துள்ளனர் ஆன்றோர்.

அதேபோன்று அவரவர் கோரிக்கைகள் நிறைவேற சொல்லவேண்டிய ப்ரத்யேக ஸ்துதிகளும் உண்டு.

' துர்க்கா ஸப்த ஸ்லோகீ ' - ஏழு ஸ்லோகங்களையும் , எட்டாவதாக அவரவர் வேண்டுகோளுக்குரிய ஸ்துதியும், தினமும் சொன்னாலே போதும். துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்பம் நிறையவும் நிலைக்கச் செய்வாள் அன்னை துர்க்கை.

மனம் ஒன்றி, நிதானமாக, அனுபவித்து, வாய்விட்டு சொன்னால் சிறந்த பலன்களை தரும்.

ஸ்ரீ துர்கா ஸப்தச்'லோகீ

ஓம் அஸ்ய ஸ்ரீ துர்கா ஸப்தச்'லோகீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
நாராயண ருஷி: || அனுஷ்டுப்சந்த:
ஸ்ரீ மஹாகாளி, மஹாலக்ஷ்மீ, மஹா சரஸ்வத்யோ தேவதா: |
ஸ்ரீ ஜகதம்பா ப்ரீத்யர்த்தே ஜபே (பாடே) விநியோக: ||

க்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா ।
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி ॥ 1 ॥

மகாமாயையான பகவதி தேவி ஞானியரின் சித்தங்களையும் பலவந்தமாக தன் மாயா சக்தியால் இழுத்து மோகத்தில் செலுத்துகிறாள்.

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசே'ஷ ஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சு'பாம் ததாஸி ।
தாரித்ர்ய து:க்க பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா ॥ 2 ॥

கடக்க முடியாத பெரும் துன்பத்தில் ஸ்மரிக்கப்பட்டால் ஸ்ரீ துர்க்கா தேவி,சகல பிராணிகளின் அச்சத்தையும் போக்குகிறாள் (அல்லது) துர்கே உனை ஸ்மரித்த மாத்திரத்தில் எல்லா உயிரினங்களின் பயத்தையும் போக்குகின்றாய். இன்ப நிலையில் இருந்து கொண்டு ஸ்மரிக்கப்பட்டால் பரம மங்களமான நல்லறிவை நல்குகிறாய். வறுமை, துன்பம், பயம் ஆகியவற்றை நீக்குபவளே ! ஸகலருக்கும் ஸர்வ உபகாரங்களையும் செய்வதற்காக ஸதாகாலமும் காத்திருக்கும், கருணையால் நிரம்பிய நெஞ்சுடையவர் உனையன்றி எவர் உண்டு?

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ।
ச'ரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

மங்கள வஸ்துக்கள் அனைத்தினும் பரம மங்களமானவளே! மங்களமே வடிவான சிவனின் சக்தியே! சகல புருஷார்த்தங்களையும் சாதித்துத் தருபவளே! சரணாகத நிலையமே! முக்கண் படைத்த (அல்லது மூம்மூர்த்தியருக்கும் அன்னையான) த்ரயம்பகியே ! வெண்பொற் சோதியாம் கௌரி! நரருக்கெல்லாம் ஆசிரயமாம் நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

ச'ரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே ।
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥

'சரண்' என வந்த தீனரையும் துன்புற்றோரையும் மிக அருமையாகக் காப்பதையே தொழிலாகக் கொண்ட தேவி! அனைவரின் துன்பங்களையும் நீக்கும் நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

ஸர்வஸ்வரூபே ஸர்வேசே' ஸர்வச'க்தி ஸமந்விதே ।
பயேப்யஸ்த்ராஹிநோ தேவி துர்க்கே தேவி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

காணும் உருவனைத்தும் நீயே! அனைத்தையும் ஆளும் தேவி நீயே! சர்வ‌ சக்தியும் ஒன்றிய இடம் நீயே! தேவி துர்கே! உனக்கு வந்தனம்! எங்களை அச்சங்களினின்று ரட்சித்தருள்வாய்!

ரோகா நசே'ஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டாது காமான் ஸகலான-பீஷ்டான் ।
த்வாமாச்'ரிதானம் ந விபந்நராணாம்
த்வாமாச்'ரிதா ஹ்யாச்'ரயதாம் ப்ரயாந்தி ॥ 6 ॥

(பக்தியினால்) நீ திருப்தியடைந்தால், சகல ரோகங்களையும் அறவே அகற்றுகிறாய். கோரும் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி அருள்கிறாய். உனை அரண் போல பாதுகாப்பாகக் கொண்ட மனிதருக்கு இடர் என்பதே இல்லை. அவர்களே பிறருக்கு அரணாகின்றனர் அன்றோ?

ஸர்வா பாதா ப்ரச'மனம் த்ரைலோக்ய-ஸ்யாகிலேச்'வரி ।
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாச'னம் ॥ 7 ॥

அகிலாண்டேசுவரி! உன்னால் எமது பகைவர்கள் அழிக்கப் பெற வேண்டும். இவ்வாறே மூவுலகிலும் உள்ளவர்களின் சகல துன்பங்களையும் நீ அடியோடு அகற்றி அருள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக